ஃப்ரீமேசன்ஸ்அமைப்பினர்,300ஆண்டுகால பாரம்பரியத்தைக் சகோதரத்துவ தினத்தை’ கொண்டாடுவதற்காக சென்னையில் ஒன்றுகூடினர்

e6c3ea55-de49-4303-bf87-26711b8f5333

சேவை,தலைமைத்துவம்மற்றும்சகோதரத்து வம் ஆகியவற்றில் கிட்டத்தட்ட 300 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட ஃப்ரீமேசன்ஸ் அமைப்பினர், ஆண்டுதோறும் ஜூன்24அன்றுகடைபிடிக்கப்படும்’சகோதரத்துவதினத்தை’கொண்டாடுவதற்காக சென்னையில் ஒன்றுகூடினர். சென்னை எழும்பூர், எத்திராஜ் சாலையில் உள்ள ‘ரீஜினல் கிராண்ட் லாட்ஜ் ஆஃப் சதர்ன் இந்தியா’

வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

விவேகானந்தர், நேரு, ராஜாஜி உட்பட பல முக்கிய முன்னோடிகள் உறுப்பினராக இருந்த இந்த அமைப்பில் இந்தியாவின் பல முக்கியத் துறைகளில் பங்காற்றிவரும் பிரபலங்கள் இன்றும் செயல்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய ஃப்ரீமேசன்ஸ் அமைப்பின் கிராண்ட் மாஸ்டரும் தேசியத் தலைவருமான குத்தா கிருஷ்ணன் செல்வராஜன், ஃப்ரீமேசன்ஸ் அமைப்பின் சிறப்பான வரலாறு மற்றும் நிலைத்திருக்கும் விழுமியங்கள் குறித்து கூறினார். கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக உறுப்பினர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் சேவை, தலைமைத்துவம், தார்மீக விழுமியங்கள் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை இந்த அமைப்பு தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும்

சமூக சேவை, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுப்பினர்கள் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒரு நிகழ்வாக ‘சகோதரத்துவ தினம்’ கொண்டாடப்படுவதாகக் கூறினார்..

About Author