தி வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ் மருத்துவமனையும் எம்.எம்.எம். மருத்துவமனையும் இணைந்து, இதயம்சார்ந்த பரிசோதனை 

0

????????????????????????????????????

தி வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ் மருத்துவமனையும் எம்.எம்.எம்மருத்துவமனையும் இணைந்துஇதயம்சார்ந்த பரிசோதனைகளுக்கும் ஆலோசனைகளுக்குமான ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பிரத்யேக பிரிவுக்கானகட்டடம், தரமணியிலுள்ள வி.எச்.எஸ். வளாகத்தில்அமைந்துள்ளது. எம்.எம்.எம். மருத்துவமனையைச்சேர்ந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும்கொண்ட இந்தப் பிரிவில், தீவிர சிகிச்சை வசதியும்உண்டு. மே 16, 2022 முதல் இந்தப் பிரிவு செயல்படத்தொடங்கும்.

எதிர்காலத்தில், தமிழ்நாட்டின் நகர மற்றும் கிராமமக்களிடைய இதயநோய்கள் பெருகுவதற்கானஅபாயம் பெருகுவதாக பல்வேறு ஆய்வுகள்தெரிவிக்கின்றன. குறிப்பாக, கொழுப்புகள், உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, முன்நீரிழிவு ஆகிய பாதிப்புகள்மக்களிடைய அதிகரித்துவருவதால், இதயநோய்களும்அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த புதிய பிரிவு தொடர்பாக கருத்துத் தெரிவித்தமெட்ராஸ் மெடிக்கல் மிஷனைச் சேர்ந்த கெளரவசெயலாளர் எம்.எம்.பிலிப், “இந்தியாவில் மரணம்அடைபவர்களின் முக்கிய காரணியாக இதயநோய்கள் இருக்கின்றன. 

மேலும், இதய நோய்மருத்துவத்துக்கான தேவை சென்னையில் அதிகரித்து வருவதால், நகரத்தின் பிறபகுதிகளுக்கும் எங்கள் சேவை பரவ வேண்டும்என்பதற்காக இந்தப் பிரிவைத் தொடங்குகிறோம். எம்.எம்.எம்.ஐப் பொறுத்தவரை, வி.எச்.எஸ்.சுடன்நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த உறவின் மூலம், சென்னையின் இதரப் பகுதிகளில் உள்ளோருக்கு, மிகத்தரமான சிகிச்சையைக் கொண்டுசேர்க்கமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.

தி வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ் மருத்துவமனையின்கெளரவ செயலாளர்டாக்டர் எஸ்சுரேஷ்இந்தமுயற்சி பற்றி, “வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ்மருத்துவமனை என்றாலேகுறைவான கட்டணத்தில்உலகத் தரத்திலான மருத்துவ சேவையை வழங்கும்அமைப்பு என்ற புகழைப் பெற்றுள்ளதுதென்சென்னைப் பகுதி வாழ் மக்களுக்காக இந்தநவீனமான இதய மருத்துவ பிரிவைத் தொடங்குவதில்மகிழ்ச்சி அடைகிறோம்ஏழை எளியவர்களுக்குசகாயவிலையில் மருத்துவம் கிடைக்கவேண்டும்என்பதே எங்கள் குறிக்கோள்இதுஅனைத்துத்தரப்பு மக்களுக்கும் உயர்தரமான மருத்துவசிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற எம்.எம்.எம்மருத்துவமனையின் குறிக்கோளோடுஒருங்கிணைந்துள்ளது என்பதே சிறப்பானதாகும்என்றார்.

புதிய இதயநோய்ப் பிரிவு பற்றி மெட்ராஸ் மெடிக்கல்மிஷன் மருத்துவமனையின் இதயநோய்த் துறைஇயக்குநர் டாக்டர் அஜித் முல்லசேரி, “இந்தஇதயநோய்ப் பிரிவில் பணியாற்றும்மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்குஎம்.எம்.எம்மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் என்பதால்அவர்களுக்குத் தொடர்ந்து பல்வேறு நிலையில்ஆதரவும் உதவிகளும் செய்யப்படும்எம்.எம்.எம்மருத்துவமனை இதயநோய் நிபுணர்களோடுஇவர்களுக்கு நேரடி தொடர்பு இருக்கும்அவர்களுடைய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படிநோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படும்தேவைப்பட்டால்மேல் சிகிச்சைக்குநோயாளிகள்முகப்பேரில் உள்ள எம்.எம்.எம்மருத்துவமனைக்குமாற்றப்படுவர்,” என்றார்.

சிறப்பு புறநோயாளிகள் கட்டடத்தைமே 14, 2022 அன்றுவி.எச்.எஸ்தலைவர் திருஎன்கோபால்சுவாமி அவர்கள் தொடங்கிவைப்பார்வி.எச்.எஸ்எம்.எம்.எம்இன்ஸ்டிடியூட் ஆப்கார்டியோவாஸ்குலர் டிசீசஸ் பிரிவை, வி.எச்.எஸ். கெளரவ செயலாளர் பேரா. சுரேஷ் முன்னிலையில்,  வி.எச்.எஸ். நிர்வாக அறங்காவலர் திரு. ஆர். ராஜகோபால் திறந்துவைப்பார். சிறப்பு விருந்தினராக, எம்.எம்.எம். கெளரவ செயலாளர் திரு. எம்.எம். பிலிப்கலந்துகொள்வார்.

வி.எச்.எஸ். இயக்குநரும் தலைமை செயல்அதிகாரியுமான டாக்டர் யுவராஜ் குப்தா, நன்றியுரைவழங்குவார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *