புது டெல்லியில் ” ஸ்டார்ட் அப்ஸ் கா மஹாகும்ப் ” புதிய தொழில் முனைவோருக்கான மாநாடு

சென்னை- ஏப்ரல், 28,
ஆசியாவின் மிகப்பெரிய தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட் அப் நிகழ்வு ஜூன் 28,29, 30 ஆகிய தேதிகளில் ரிட்டர்ன்ஸ்: இந்தியாவின் முதல் ஸ்டார்ட் அப்ஸ் கா மஹாகும்ப் என்ற பெயரில் நடைபெறவுள்ளது.
இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஃப்.டபுள்யூ.சி நிறுவனத் தலைவர் சி.கே. அசோக் குமார் அறிவித்தார்.

முதல் குடி மூத்த குடி என்னும் எஃப்.டபிள்யூ .சி யும் அகில இந்திய ரோபாட்டிக்ஸ் & ஆட்டோமேஷன் கவுன்சிலுடன் இணைந்து நடத்தும் இந்தியாவின் முதல் ஸ்டார்ட்அப்ஸ் கா மஹா கும்ப் 2024 இன் 4வது பதிப்பு இதுவாகும்.

இந்நிகழ்ச்சி புது தில்லியில் உள்ள புகழ்பெற்ற யஷோபூமி மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் ஆசியாவின் மிகப்பெரிய தொடக்க ஆர்வலர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த பிரமாண்ட நிகழ்வின் முன்னோடியாக, ஏப்ரல் 25, 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்ட சாலைக் காட்சி உட்பட, நிகழ்வுக்கு முந்தைய நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ரோட்ஷோ, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட எண்ணற்ற தொடக்கத் திட்டங்களை பிரதிபலிக்கும்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பில்
ஏ.ஐ.சி.ஆர்.ஏ இன் தலைவர் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபியூச்சர் & இன்ஜினியரிங் சயின்சஸ் தொழில்துறை தலைவர் ராஜ் குமார் ஷர்மா, இக்கூட்டத்தை தொடங்கி வைத்தார்..

மேலும் ஷர்மா இந்தியாவின் முதல் ஸ்டார்ட் அப்ஸ் கா மஹாகும்ப் பற்றிய விரிவான விவரங்களை எடுத்துரைத்தார்.

ஏஃப்.டபிள்யூ.சி நிறுவனர் சி கே .அசோக் குமார் நிகழ்வு பற்றி உரையாற்றினார். டி.என்.எஸ்.டி.,சி.விஸ்வநாதன், கிரியாடெக், நிறுவனர் பாஸ்கர் நேச்சுரல்ஸ் முன்னாள் தலைமை செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில்  உரையற்றினர்.

மேலும் எஃப்..டபிள்யூ.சி நாரி சக்திகள் ஏ.சி. இன்னோவேஷன் ஹப் (சிங்கப்பூர்/இந்தியா உலகக் கதைசொல்லல் சிங்கப்பூர்சாம்பியன்ஷிப்பை 181 நாடுகளில் நடத்துகிறது.) இணை நிறுவனர் டாக்டர்
நீனா காயத்ரி,
இந்தியன் லீக் ஆஃப் வெர்சடைல் என்டப்ரெனர்ஸ் டிரஸ்டின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்.ஆயிஷா
வழக்கறிஞரும் இந்தியன் லீக் ஆஃப் வெர்சடைல் என்டப்ரெனர்ஸ் டிரஸ்டின்  அறங்காவலர்.பத்மினி
அகல் அறக்கட்டளையின் நிறுவனர் அம்பிகாராஜ் டிசா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் விஜயலட்சுமி
ஹாக்கினியின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ டாக்டர். தீபா சதீஷ் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் சந்தி கலந்து கொண்டு உறையாற்றினர்.

மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

About Author