தென்னிந்தியாவில், மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் 22-23 நிதியாண்டில் 37% அதிகரிப்பை பதிவு செய்கிறது,

சென்னை, ஜூலை 25, 2023– இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தனித்தியங்கும் உடல்நல காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான மணிப்பால்சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ், அதன் புதுமையான உடல்நல காப்பீட்டு தீர்வுகளுடன், உடல்நல நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் பிரிவுகளை அடைவதற்கும் இந்தியா மற்றும் தெற்குச் சந்தைகளில் தனது இருப்பை பலப்படுத்துகிறது. இந்த காப்பீட்டாளர், அதன் வலுவான பல்-வழி விநியோக வலையமைப்பு மற்றும் பல திட்ட வழங்குதல்களை மேம்படுத்துவதன் மூலம், தெற்கு சந்தையில் உடல்நல காப்பீட்டு ஊடுருவலை அதிகரிப்பதற்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கு தரமான உடல்நல பராமரிப்புக்கான எளிதான மற்றும் வாழ்நாள் அணுகலை வழங்குவதற்கும் அதன் நோக்கத்தில் உறுதியாக உள்ளது என்றார்

மணிப்பால்சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் இன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சப்னா தேசாய் கருத்துத் தெரிவிக்கையில், “தென்னிந்தியா எங்களுக்கு வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் மணிபால்சிக்னா இல் உள்ள நாங்கள் பிராந்தியத்தில் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நிதி நலனில்ஒருநேர்மறையானதாக்கத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளோம். மணிபால் குழுமத்தின் உள்ளூர் நிபுணத்துவத்தின் இந்த கூட்டன்மையான, இந்தியாவின் இரண்டாவது பெரிய மருத்துவமனை சங்கிலி ஆக இருப்பது மற்றும் சிக்னா ஹெல்த்கேரின் உலகளாவிய அனுபவம் ஆகியவை எங்களை ஒரு உண்மையிலேயே தனித்துவமான உடல்நல பராமரிப்பு நிதி வழங்குநராக மாற்றியுள்ளது. அதிகரித்து வரும் மருத்துவ பணவீக்கம், வாழ்க்கை முறை நோய்கள், தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்கள் ஆகியவற்றின் காரணமாக உடல்நல காப்பீட்டிற்கான தேவையில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் மற்றும் பல்வகைப்பட்ட உடல் பராமரிப்பு நிதி தேவைகளுக்கு மலிவான, யூகிக்கக்கூடிய மற்றும் எளிமையான சுகாதார காப்பீட்டு தீர்வுகளை வழங்குவதன் மூலம் தென்னிந்தியாவில் எங்கள் வளர்ச்சி பயணத்தைத் தொடர நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறினார்.

About Author