தமிழக முதல்வரின் பிறந்தநாள் – இளைஞர்களில் எழுச்சி நாள்விழா- 5071 நபர்களுக்கு நல திட்ட உதவி

சென்னை: சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட 140 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம். ஸ்ரீதர் அவர்களின் ஏற்பாட்டில் பிறந்தநாள் விழாவும் நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று . இதில் சிறப்பு விருந்தினராக பொதுப்பணி ( ம) நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு முதல்வரின் சாதனைகள் மற்றும் திராவிட கழக கொள்கைகள் ஆகியவற்றை பறை சாற்றினார். தளபதியில் பிறந்த நாள் விழாஎப்போதும் தமிழகத்தில் முதல் நிகழ்ச்சியாக இங்கே தான்நடக்கும்அதனை மாமன்ற ஸ்ரீதர் ஆண்டுதோறும் சிறப்பாக செய்து வருகிறார். மேலும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா
மொழி, தென்
சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி,துணை மேயர் மகேஷ் குமார் ,10வது மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி,
13 வது மண்டல் குழு தலைவர்
துரைராஜ் உட்பட
140வது வட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கழகத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

About Author